அதிகாலை தேநீர்
தோழியின் குறுஞ்செய்தி
தோட்டத்து மலர்களால் ஒரு
சிறு புன்னகை
தூரத்தில் ஒலிக்கும் பாடலில்
பிடித்த வரிகள்
இரவில் மழை மண் வாசம்
அவளுக்கு பிடிக்கும்
அவள் மனதை நிறைக்கும்.
அதிகாலை தேநீர்
தோழியின் குறுஞ்செய்தி
தோட்டத்து மலர்களால் ஒரு
சிறு புன்னகை
தூரத்தில் ஒலிக்கும் பாடலில்
பிடித்த வரிகள்
இரவில் மழை மண் வாசம்
அவளுக்கு பிடிக்கும்
அவள் மனதை நிறைக்கும்.
அவளால் செய்ய முடிந்த நல்ல விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?
தடித்த வார்த்தைகள் முட்களை போல
இன்னும் இன்னும் தைக்கின்றன.
மறக்க நினைக்கும் சண்டைகளுக்கூடான
நிகழ்வுகள் மட்டும் ரணமாகிக் கிடக்கின்றன.
அவளின் தவறுதான் என்ன?
மகிழ்ந்திருக்க ஒரு சிறு துரும்பு காரணமும்
கிடைக்காமல் தேடித்தேடி மனமே மனதை துளைக்கிறது.
கொஞ்சம் பேசி நெஞ்சம் மகிழ்ந்து
அயர்ந்து தூங்க ஆசை கொள்கிறது
அவள் மனது.
அவள் தனிமையில் இல்லை.
அவள் செடிகளோடு பேச தெரிந்தவள்.
மலர்களின் மணத்தால் மனதை நிறைத்துக்கொள்பவள்.
துளிர்க்கும் சிறு அரும்பும் அவள்
நம்பிக்கை போல செழித்து வளர்ந்தோங்குகிறது.
பாத்திரங்களின் இரைச்சலில் அவள் விம்மலையும்
கழுவும் தண்ணீரினூடே கண்ணீரையும்
கரைத்து கடத்த முனைபவள்.
அவள் தனிமையில் இல்லை.
வகுப்புத்தோழிகளின் நினைவுகளோடு தினமும் சிரிக்கிறாள்.
ஏதோ பாடல்களினால் செவிகளை நிறைத்துக் கொள்கிறாள்.
உள்ளம் உடைந்து வெடித்து கிளம்புகையில்
தன் கைகளால் தன்னையே வளைத்து அணைத்துக் கொள்கிறாள்.
அவள் தனிமையில் இல்லை.
அதிகாலை தேநீர் தோழியின் குறுஞ்செய்தி தோட்டத்து மலர்களால் ஒரு சிறு புன்னகை தூரத்தில் ஒலிக்கும் பாடலில் பிடித்த வரிகள் இரவில் மழை மண் வ...